எமது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் நினைவு கூரப்பட்டது.
முதலில் பொதுச்சுடரினை நீண்டகால தேசிய செயற்பாட்டாளர் திரு துரைராஜா யோகேஷ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
கப்டன் வாசு, மேயர் ஜேம்ஷ், கப்டன் சுந்தரி ஆகியோருடைய சகோதரன் திரு உருத்திராபதி சேகர் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.
ஈகை சுடரினை நீண்டகாமாக கலை பண்பாட்டுக் கழகத்தோடு இணைந்து செயற்படும் நடன ஆசிரியை திருமதி சாமினி கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.












