22.09.24 சனிக்கிழமை மாலை Our Lady Church Hall ல் தமிழர் நலன்புரிச்சங்கம் லெஸ்டரினால் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. ஈகைச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு லெஸ்ரர் மாநில பொறுப்பாளர் அசோக் அவர்கள் ஏற்றி வைத்தார்.தமிழர் நலன்புரிச்சங்க தலைவி திருமதி ஜெயதா மணிவண்ணன் அவர்களின் நினைவுரையுடன் எழுச்சி கவிதைகள், நடனங்கள் மற்றும் மலர்வணக்கம் சுடர்வணக்கம் இடம்பெற்றது. இறுதியாக உறுதி மொழியுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.













